Saturday, July 12, 2014

பாலஸ்தீன காஸா இஸ்ரேலின் சிறைக்கூடம்

பாலஸ்தீன காஸா பகுதியை இஸ்ரேல் தனது சிறைக்கூடமாக தான் வைத்துள்ளது

.* உணவுப்பொருள் சாதரணமாக உள்ளே வர முடியாது ,
இஸ்ரேல் வாகன சோதனை சாவடியை கடந்து தான் வரமுடியும் . அதையும் பல நேரங்களில் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் .* சுகாதாரம் இல்லை

* நல்ல குடிநீர் இல்லை , அசுத்தமான குடிநீரை குடித்து தான் இம்மக்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா. சபையே ஒப்புக்கொண்டுள்ளது.

* மருத்துவமனைகள் கிடையாது . உயிர் காக்கும் மருந்துகள் உள்ள நவீன மருந்தகம் இல்லை .உயிர் காக்கும் மருந்துகள் வாங்குவதற்கு இஸ்ரேல் தான் வரவேண்டும் . அங்கு நீண்ட வரிசையில் காத்து நின்றதால் பல உயிர்கள் பலியாகி உள்ளன . போர் நடைபெறும் போது உயிருக்காக போராடுபவர்களை காக்கும் மருந்து பொருட்கள் பாலஸ்தீன பகுதியில் இல்லை .

* வான் வெளி மொத்தமும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன . வான் வெளி வழியாகவும் எந்த பொருளும் போட முடியாது

* கல்வி வசதிகள் கிடையாது . உயர் கல்வி கற்க வேண்டுமெனில் இஸ்ரேல் தான் வர வேண்டும் .அங்கு இம்மக்களுக்கு சிறந்த கல்வியை தர மாட்டார்கள் . ஆகையினால் பாலஸ்தீன மக்கள் சிறுவயதிலேயே வேலைக்கு செல்லும் அவலம் .

* விமான நிலையம் கிடையாது

* துறைமுகம் கிடையாது .பத்து கிலோ மீட்டர் அளவில் தான் மீன் பிடிக்க வேண்டும் * ஏதேனும் தேவைக்கு எகிப்தின் ரஃபா எல்லைக்கு தான் செல்ல வேண்டும் .அதற்கும் நிறைய கெடுபிடிகள்

.* காஸாவிலிருந்து எகிப்துக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதாள சுரங்கம் அமைத்துள்ளனர் .அந்த சுரங்கம் வழியாக தான் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றனும்

* ஏதேனும் தேவைக்கு எகிப்தின் ரஃபா எல்லைக்கு தான் செல்ல வேண்டும் .அதற்கும் நிறைய கெடுபிடிகள்

* காஸாவிலிருந்து எகிப்துக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதாள சுரங்கம் அமைத்துள்ளனர் .அந்த சுரங்கம் வழியாக தான் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இம்மக்கள் பயணப்படுகின்றனர் . அந்த சுரங்கமும் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் காரணமாக சிதைந்து விடுகிறது . அதனை சரி செய்வதற்குள்ளாக அடுத்த தாக்குதல் நடைபெற்று விடுகிறது .

* அகதிகளாக அடுத்த நாட்டிற்கும் அவ்வளவு எளிதாக செல்லவும் முடியாது .

* மொத்தத்தில் இஸ்ரேல் அமைத்துள்ள சிறைச்சாலை தான் காஸா பகுதி ....


MOHAMED ANAS

எப்படி படங்களில் மேல் எழுதுவது

எப்படி படங்களில் மேல் எழுதுவது

ANDROID SMART PHONES-PLAY STORE -DOWNLOAD-TEXTGRAM 

இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்த பின்பு 







கிழே உள்ள படத்தில் காட்டியவாறு நீங்கள் எதை எழுதனுமோ அதை எழுதி மேலே NEXT என்று உள்ளதை தேர்ந்தெடுத்து அடுத்ததிற்கு செல்லவும்


கிழே உள்ள படத்தில் 

TEMPLATES, STICKERS ,FONTS,TEXT EFFCTS மற்றும் நிறைய வசதிகள் உண்டு உங்களுக்கு ஏற்றாற்போல் அமைத்து கொள்ளவும்



பிறகு NEXT அழுத்தினால் கிழே உள்ள மாதிரி உங்களுக்கு TEXT IN PICTURE PHOTO READY ,,,அப்படியே  FACEBOOK ல் SHARE செய்யலாம் 


எதுவும் விளக்கம் தேவைபட்டால் COMMENTS ல் கேட்கவும் 


மல்லியூரான்

சிலந்தி மணிமாலை

 
 
 தெளர் குகையில் மறைந்திருந்த பெருமானார் ( ஸல் ) அவர்களையும் ஹஜரத் அபூபக்கர்  ( ரலி ) அவர்களையும் வலை பின்னிக் காப்பற்றிய சிலந்தி பற்றிய கவிதை.  
 
 
சிலந்தி யென்றால்- அது 
சாதாரண சிலந்தியா?
இல்லை....
சிங்கத்தின் குகைக்கே 
ஆடை தைத்த சிலந்தி 

பட்டொளி வீசிப் 
பறக்கும் வெற்றிப் பதாகைக்குத் 
துணி நெய்யத்தான் 
அன்று சிலந்தி நூல் நூற்றதோ? 

ஏகத்துவ  நெறியெனும்
இனிய குழந்தைக்கு 
தெளர் குகைச் செவிலித் 
தாய் அவள்
வலைச் சட்டை பின்னி 
மனம் மகிழ்ந்தாளோ?

வள்ளல் நபிகளார் 
வருகை புரிந்ததால்
குட்டைச்  சிலந்திப் பெண் 
குகையின் வாசலுக்கு- வெண் 
பட்டுக் குஞ்சம் 
கட்டிப் பார்த்தாளோ ?

இன்று 
அருமை நபிகளாம் 
அண்ணலாரைப் பற்றி 
எத்தனையோ நூல்கள் 
எழுதப்படுகின்றன
அவற்றுக் கெல்லாம் 
ஆதாரம்- 
மூல நூல் – 
சிலந்தி எழுதிய 
அந்தச் 
சிறுநூல்தானே?

வெறும்- 
நூலாம்படைதான்!
ஆனாலும் அது 
அண்ணலாரைக் காட்டிக் கொடுத்து 
ஐந்தாம்படையாய் 
ஆகவில்லை- ஆதலினால் 
அது 
நாலாம்படைக்கும்
மேலாம் படைதான்! 

உத்தமத் தலைவருக்கு 
உறைவிடம் தந்ததனால் 
தெளர் குகைக்கு 
சிலந்தி  என்கிற 
சிறிய பிரமுகர் 
பொன்னாடை போர்த்திப் 
போற்றினாரோ ?

Friday, July 11, 2014

இஸ்ரேலை பற்றிய ஒரு பார்வை:

இஸ்ரேலை பற்றிய ஒரு பார்வை:-

அவர்கள் சாமானிய மனிதர்கள்
அல்லர். உலகின் மிகப்பெரிய
கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள்
அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன்

கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள்.
அவர்களுடைய
இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை.


இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள
அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக
வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள்
தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக்
கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில்
முடிவு கண்டனர். அவர்களின் தலைவன்
தியோடர்ஹெட்நெல் என்பவன்.
அவர்கள் ‘யூததேசிய நிதி’
என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத்
திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப்
பல்லாயிரம் கோடி டாலர்
என்று நிதி அளித்தனர்.

ஸ்கைப் வீடியோ அழைப்புக்கு மாற்று

 வளைகுடா நாடுகளில் ஸ்கைப் வீடியோ அழைப்பு தற்போது தெளிவாக இல்லை.HOT SPOT CHIELD பயன்படுத்தினால் நன்றாக இருக்கிறது.

 அதற்கு மாற்றாக icq video calls நன்றாக உள்ளது.android smartphones play store ல் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

சில பிரச்சனைகள் இருந்தாலும் போக போக சரியாகும் என்று நினைக்கிறேன்.





 
##மல்லியூரான்##

இந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செய்தது

காசாவின் வடக்கு பகுதியான ஜபாலியாவில் யூத இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலுக்கு பலியான 4 வயதேயான பச்சிளம் குழந்தை ‪#‎யாஸ்மின்_அல்_முதவ்வக்‬ ...
இறந்த குழந்தையின் உடலை வேதனையுடன் பார்க்கும் சகோதரி....
இந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செய்தது ??அது முஸ்லிமாக பிறந்ததை தவிர.....
இக்குழந்தைக்காக கோகோ கோலா,பெப்சியை புறக்கணிக்க நம்மில் எத்தனை தாய்,தந்தை ,சகோதர,சகோதரிகள் தயார்???????


நான் காசாவிலிருந்து எழுதுகிறேன்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பலஸ்தீனத்தில் இன்னல்களுக்கு
ஆளான உன்னுடைய அடியார்களை கருணை
கொண்டு காப்பாற்று ரஹ்மானே !

உன்னை அன்றி எங்களுக்கு
பாதுகாவலன் யார் ?

எதிரிகளுக்கு உன்னுடைய
அச்சத்தை ஏற்படுத்துவாயாக
கருனையாளனே !

உன்னையை வணங்குகிறோம் !
உன்னிடமே பாதுகாவல்
தேடுகிறோம் எங்கள்
பாவங்களை மன்னித்தருள்வாயாக
யா அல்லாஹ் !

காஸாவில் இஸ்ரேல் என்ன செய்ய முயல்கிறது?...

காஸாவில் இஸ்ரேல் என்ன செய்ய முயல்கிறது?...
**************************************************************************
1.காஸா மீதான தனது தாக்குதல்களை முழு பலஸ்தீனத்திற்கும் எதிரான தாக்குதல்களாக விஸ்தரிக்கப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன் தங்களது தாக்குதல்கள் ஆனது மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாமல் நீண்ட காலம் நீடிக்கும் தாக்குதலாக நிகழ்த்தப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.

2.பலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்கள் மீது நடாத்தும் ரொக்கெட், மற்றும் மோட்டார் தாக்குதல்களிற்கு ஒரு நிரந்தர தீர்வினை காணாமல் ஓயப்போதவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேல் தாங்கள் செய்த தவறின் வலிகளை பலஸ்தீன பயங்கரவாதிகளும் அவர்களிற்கு ஆதரவளித்தவர்களும் பல தலைமுறைகளிற்கு உணரும் அளவிற்கு தாங்கள் தகுந்த பாடம் புகட்ட உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இதனை அதனது பாதுகாப்பு அமைச்சர் Moshe Yaalon காட்டமான வார்த்தைகளின் ஊடாக தெரிவித்துள்ளார்.

40 இலட்சம் கிலோ எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளது.

தற்போதைய தாக்குதலில் மடடும் காஸாவின் மீது இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவம் இதுவரை 40 இலட்சம் கிலோ எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளது.
ஹிட்லரைக் கண்டு யூதர்கள் நடுங்கியது போல், இத்துனை குண்டுவீச்சுக்குப் பிறகும் பாலஸ்தீனியர்கள் தங்களைக் கண்டு நடுங்கவில்லை என்ற கோபம் இஸ்ரேலுக்கு.
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ்வுக்கே என்ற சித்தாந்தத்தையுடைய முஸ்லிம்கள் இஸ்ரேலைக் கண்டு ஒருக்காலம் நடுங்க மாட்டார்கள்.
மாறாக, ஹிட்லரைக் கண்டு நடுங்கியதை விடப் பலமடங்கு அச்சத்தை விரைவில் இஸ்ரேல் சந்திக்கும் இன்ஷாஃ அல்லாஹ்.



#‎love_u_gaza‬ ‪#‎GazaUnderAttack‬

Thursday, July 10, 2014

நபிமார்கள் கேட்ட துஆக்கள்


01. துஆக்கள் ஏற்கப்பட
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 2: 127-128)

இந்த இரு பிஞ்சு மலர்களும் மிக கொடூரமான தீவிரவாதிகள்,

இந்த இரு பிஞ்சு மலர்களும்
மிக கொடூரமான
தீவிரவாதிகள்,
இவர்கள் செய்த குற்றங்கள் இரண்டு,
1-முஸ்லிமாக பிறந்தது.
2-ஆக்கிரமிக்கப்பட்ட
சொந்த நாட்டில் வாழ்ந்தது.
இவர்களை பெற்றவர்கள்
ஹமாஸ் தீவிரவாதிகளாம்,

மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடு

கும்பககோனம்
தஞ்சை
திருச்சி
பட்டுக்கோட்டை
மயிலாடுதுரை
மற்றும் டெல்டா

சொந்தங்களே,நண்பர்களே,
இந்த போராட்டம் நம் சந்ததியர்களின் வாழ்வாதார போராட்டம்.
தவறாமல் கலந்துகொண்டு மேலான ஆதரவை தாருங்கள்.

ஊடகமே ஏன் இக்காட்சி. உங்கள் ஊடக கண்களுக்கு தெரியவில்லையா?


 ஊடகமே ஏன் இக்காட்சி. உங்கள் ஊடக கண்களுக்கு தெரியவில்லையா?
இல்லை கண்கள் இருந்தும் குருடர்களாகவா? இது தீவிரவாதமகவும் பயங்கரவாமகவும் இல்லயா ? கண்டிப்பாக இதுபோல ஒரு நாள் உங்களுக்கும் நடக்கும்



சையது அலி

யூத பயங்கரவாதிகள் உச்சக்கட்ட கொடூரம்...!!


யூத பயங்கரவாதிகள் உச்சக்கட்ட கொடூரம்...!!

யூத பயங்கரவாதிகள் உச்சக்கட்ட கொடூரம்...!!

கண்களில் இரத்தம் வருகிறது....!!

குழந்தைகளின் கண் முன்னே தாயின் கற்பை சூறையாடும் யூத பயங்கரவாதிகள் உச்சக்கட்ட கொடூரம்...!!

யா அல்லாஹ், கடும் சக்தி படைத்த அதிபதியே, நீதியாளனே, இரட்சகனே...

உனது சாபத்தை அவர்கள் மீது இறக்குவாயாக...!!

இஸ்ரேலிய ராணுவ பயங்கரவாதிகள் அப்பாவி பாலஸ்தீன் மக்களின் மீது குண்டு மழை பொழிந்து,,,,,,,,


அக்கிரமக்கார இஸ்ரேலின் மலையளவு






அக்கிரமக்கார இஸ்ரேலின் மலையளவு குண்டுவீச்சில் அனைத்தையும் இழந்துபோய் நிற்கும் இளம் பிஞ்சு; அச்ச சலனமற்ற விழிகளுடன்... மன்னிக்கவே முடியாத மன உறுதியுடன்...

world cup 2014






உலகில் எங்காவது ஒரு நாட்டில் படுகொலை நடந்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல், உலகக் கால்பந்து போட்டிகளை மட்டுமே கண்டு களிக்கும் விளையாட்டு இரசிகர்களுக்காக:

 Kalaiyarasan Tha

Wednesday, July 9, 2014

ஒரு பெண்ணின் ஜனாஸா

   மஸ்ஜிதுன் நபவீ ''யில் ஒரு பெண்ணின் ஜனாஸா''வந்தது
.நபி ஸல் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள். அந்த சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹி வஸ்ஸலாம  நேரில் வந்து, "அந்த பெண்ணின்  ஜனாஸாவை தாங்கள் தொழ வைக்க வேண்டாம்,அப்படி தொழ வைக்க வேண்டுமானால் அந்தபெண்ணின் கபுரை சென்று பார்த்து விட்டு பிறகு தொழுகை நடத்த அல்லாஹ் சொல்கிறான் "என்று உத்திரவிடுகிறார்.நபி ஸல் அவர்கள் நேராக சென்று கபுரை காண்கின்றார்கள்.சுப்ஹானல்லாஹ்'' கப்ரு குழிக்குள் பாம்பும் ,தேளும் ,விஷ ஜந்துக்களும்.   நிறைந்து காணப்பட்டது .அதைக்கண்டு பெருமானார் ஸல்லல்லாஹு  அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள்  கவலையே உருவாக வருகின்றார்கள்

எங்கிருந்து வந்தோம் ? எங்கு செல்வோம் ? எதாவது ஐடியா இருக்கா ? ஐடி மக்களிடம் தஃவா !






எங்கிருந்து வந்தோம் ? எங்கு செல்வோம் ?
எதாவது ஐடியா இருக்கா ? ஐடி மக்களிடம் தஃவா !

கடற்கரை தஃவாவில் பல்வேறு தரப்பினரையும் காணலாம் ! நல்ல படித்த ஐடியில் பணிபுரியும் இரு நண்பர்களைப் பார்த்தோம் ! இந்த உலக சுகத்தை மட்டும் முன்னிறுத்தி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் இன்றைய இந்திய இளைஞர்களின் தோற்றத்தில் இருந்த அவர்களிடம் '' நாம் எங்கிருந்து வந்தோம் ? எங்கு செல்வோம் ? எதாவது ஐடியா இருக்கா ? என்ற போது கஷுவலாக ' நோ ஐடியா' என உதட்டைப் பிதுக்கினார்கள்!

அவர்களிடம் '' இறைவன் நம்மை எதற்காக படைத்து வாழ்வையும் மரணத்தையும் தந்தான் ! மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை எல்லாம் ஆங்கிலத்தில் நம்முடைய சகோதரர் எடுத்து உரைத்த பொது அவர்களின் முகத்தில் சற்று மாறுதல் தெரிந்தது ஆரம்பத்தில் இருந்த அசட்டை போய் பவ்யம் தென்பட்டது ! இந்தக் கேள்விகள் மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையில் எழும் எல்லாக் கேள்விகளுக்கும் இதில் விடை இருக்கிறது என குர் ஆனின் ஆங்கில மொழியாக்கத்தை வழங்கினோம் !

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும் !




Sengis Khan

பொய் நிரப்பி எழுதாதீர்கள் !

ஊடகங்களே உங்களின் பேனாக்களில்
மை நிரப்பி எழுதுங்கள் !

பொய் நிரப்பி எழுதாதீர்கள் !

இலங்கையில் எம் தமிழ்ப் பெண்களை
கற்பழித்தவர்களுக்க்ப் பெயர் அமைதிப் படை !


வீரப்பன் வேட்டையில் மலைவாழ் பெண்களை
கற்பழித்தவர்களுக்குப் பெயர் அதிரடிப் படை !

அஸ்ஸாமிலும் மணிப்பூரிலும் பழங்க்குடி பெண்களை
கற்பழித்தவர்களுக்கு பெயர் பாதுகாப்பு படை !

காஷ்மீரில் கணவனைக் கொன்று மனைவியை
கற்பழித்தவர்களுக்கு பெயர் ராணுவப் படை !

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பெண்களைக்
கற்பழிப்பவர்களுக்குப் பெயர் காவல் படை !

கரம் கூட மேலே படாமல் கண்ணியமாக
அனுப்பி வைத்தவர்களுக்க்ப் பெயர் தீவிரவாதிகள் ?!

ஊடகங்களே உங்களின் பேனாக்களில்
மை நிரப்பி எழுதுங்கள் !
பொய் நிரப்பி எழுதாதீர்கள் !


- செங்கிஸ் கான்.

அல்லாஹு அக்பர்.... அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...



அல்லாஹு அக்பர்.... அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...
*******************************************************

இந்தப் பாலஸ்தீனத்து சிறுவனின் கண்களைப் பாருங்கள்.
மிரட்சி தெரிகின்றதா?

இந்தச் சிறுவனின் பிஞ்சு கைகளைப் பாருங்கள். அவற்றில் பயம் துளியாவது தெரிகின்றதா?

அவனுடைய முகத்தையும் தலையைச் சாய்த்து வைத்திருக்கும் ஸ்டைலையும் பாருங்கள். பீதி தெரிகின்றதா?

இல்லை. இல்லை. இல்லவே இல்லை என்றுதானே சொல்கின்றீர்கள்.

ஏன் தெரியுமா?

இறைவனை அஞ்சுகின்றவன் வேறு எவருக்கும் எந்த சக்திக்கும் அஞ்ச மாட்டான்.

ஏன் தெரியுமா?

ஆட்கொல்லி ஆயுதங்களை விடவும், பயங்கர யுத்தக் கருவிகளையும் விட நெஞ்சில் நிலைத்திருக்கின்ற ஈமான் வலிமையானது.

அல்லாஹு அக்பர் என்று சொல்ல மனம் பரபரக்கின்றதா?

சொல்லுங்கள். சொல்லுங்கள்.

- டி அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

உங்களில் மிகவும் சிறந்தவர் நற்குணமுடையவரே:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

யா அல்லாஹ்! எங்களை நற்குணங்கள் கொண்டவர்களாக ஆக்கி வைப்பாயாக....
இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.
உங்களில் மிகவும் சிறந்தவர் நற்குணமுடையவரே: -

முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, ‘அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை’ என்று கூறிவிட்டு, ‘நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர் :மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்), ஆதாரம் : புகாரி.

கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! சாபமிடாதீர்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட ‘அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்’ என்றே கூறுவார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்களும் “நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)

இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்”. (ஆதாரம்-புகாரி)

ஒவ்வொரு நல்ல வார்த்தையும் தர்மம் ஆகும், என்று நபியவர்கள் நவின்றார்கள் (ஆதாரம்-புகாரி)

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு சொன்னதோடு நின்று விடாமல் தானும் அவ்வாறே நடந்துள்ளார்கள்.

ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, அவர்களுடைய வாழ்க்கை குர்ஆன் ஆகவே இருந்தது என்றார்கள்.

இவ்வாறு நற்குணங்களை இயற்கையாக கொண்ட நபி (ஸல்) அவர்களே அதற்காக இறைவனிடம் பிராத்தித்துள்ளார்கள்.

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் “என்னுடைய இரட்சகனே! என்னை அழகாக படைத்ததைப் போன்றே என்னுடைய ஒழுக்கத்தையும் அழகுப்படுத்துவாயாக” என்று பிராத்தித்தார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

நற்குணத்தோடு இருக்கும் மனிதர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பரிசைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் “நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது” என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ உமாமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு மனிதன் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்து விடும்போது அம்மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டைப் பெற்றுத்தர நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கை விட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை பெற்றுத் தர நான் பொறுப்பேற்கின்றேன் தன் குணங்களை சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவர்க்கத்தில் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தர பொறுப்பேற்கின்றேன் (ஆதாரம்: அபுதாவூத்).

இறைவன் அளித்த அருட்கொடையான நாவை நல்வழியில் பயன்படுத்துவோரே வெற்றியாளர்கள் என்று இறைவனும் கூறிகிறான்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் எத்தகையவரென்றால் அவர்கள் வீணான பேச்சு செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்கள். இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள் இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரம் கொண்டு அதில் நிலையாக தங்கியிருப்பார்கள் (அல்குர்ஆன் 23:1-11)

மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொரு அசைவிலும் அவனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவனும் அவனின் தூதரும் கூறி உள்ளார்கள்.

“இறைவனை தவிர வேறு கடவுள் இல்லை அவனின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்” என்று வெறும் வாயளவில் கூறிக் கொள்வதால் மட்டும் முஸ்லிம் (இறைநம்பிக்கையாளர்) ஆகிவிட முடியாது.
— 

சிறந்த வரிகள்:

சிறந்த வரிகள்:

மனிதர்கள் வேண்டுமானால் செல்வதை கண்ணியமாக கருதலாம்,
மனிதர்கள் வேண்டுமானால் கல்வியை கண்ணியமாக கருதலாம்,
மனிதர்கள் வேண்டுமானால் அழகை கண்ணியமாக கருதலாம்,
மனிதர்கள் வேண்டுமானால் பதவியை கண்ணியமாக கருதலாம்,

ஆனால் அல்லாஹ் ஈமானை மட்டும் தான் கண்ணியமாக கருதுவான்.

யா அல்லாஹ் எங்களின் ஈமானை உன் மார்க்கத்தில் உறுதி படுத்துவாயாக!!
 

உடல் ஆரோக்கியதிற்காக மூன்று முறை ஓதுங்கள்...

உடல் ஆரோக்கியதிற்காக மூன்று முறை ஓதுங்கள்...

அல்லாஹும்ம ஆஃபினி ஃபி ப(B)தனி,
அல்லாஹும்ம ஆஃபினி ஃபி சம்யீ,
அல்லாஹும்ம ஆஃபினி ஃபி ப(B)ஷரீ,
லாயிலாஹ இல்ல அன்த...

யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.

திருக்குர்ஆனின் அறைகூவல்

திருக்குர்ஆனின் அறைகூவல்
எழுதப் படிக்கத் தெரியாத
முஹம்மது நபிக்குத் திருக்குர்ஆன்
அருளப்பட்டது.
முஹம்மது நபி அவர்களின் காலத்தில்
குறைந்த எண்ணிக்கையில் இருந்த
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்
மொழியில் மிகவும்
விற்பன்னர்களாகவும், உயர்ந்த
இலக்கியத் தரத்தில்
கவிதைகளை இயற்றுவோராகவும்
இருந்தனர்.
எழுதப் படிக்கத் தெரியாத
முஹம்மது நபி அவர்கள்
எதை இறைவேதம் எனக்
கொண்டு வந்தார்களோ அது அன்றைய
விற்பன்னர்களது
இலக்கியத்தை மிஞ்சும் வகையில்
அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத
ஒரே இலக்கியமாகவும்
அமைந்திருந்தது.
எனவே "இவ்வளவு உயர்ந்த
இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத
முஹம்மது கற்பனை செய்து விட்டார்
என்று நீங்கள் கருதினால்
பண்டிதர்களான நீங்கள் இதுபோல்
தயாரித்துக் காட்டுங்கள்!''
என்று அறைகூவல் விடப்பட்டது.
முழு மனித குலத்துக்குமான இந்த
அறைகூவல் இன்றளவும் எவராலும்
எதிர்கொள்ளப்படவில்லை.
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.
11:13. அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக..
 

உலகில் பலமானது எது?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹூ




உலகில் பலமானது எது??



"அல்லாஹ் பூமியைப்படைத்தபோது அது அசைந்துகொண்டும்
நடுங்கிக்கொண்டும் இருந்தது. எனவே அதில் மலைகளை ஊன்றிவிட்டான்..
பூமி நிலைபெற்று நின்றது. மலையின் வலிமையைக்கண்டு வானவர்கள் யா அல்லாஹ்
மலைகளைவிட சக்திமிகுந்த எதையும் படைத்துள்ளாயா? என்று கேட்டனர்.
ஆம் உண்டு அதுதான் இரும்பு என்றான்.



இரும்பைவிட சக்தி மிகுந்தது எது என்று கேட்டபோது நெருப்பு என்றான்.
நெருப்பைவிட சக்தி மிகுந்தது எது என்றுகேட்டபோது தண்ணீர் என்றான்.
தண்ணீரைவிட சக்தி மிகுந்தது எது என்று கேட்டபோது காற்று என்றான்.
காற்றைவிட சக்தி மிகுந்தது எது என்று கேட்டபோது வலக்கையால் கொடுக்கும் தர்மம் இடக்கைக்கு தெரியாமல் இயங்கும் மனிதன் என்றான்...!


திர்மிதி 361




மாஷா அல்லாஹ்
லா ஹவ்ல வலா ஹூவத்த
இல்லாபில்லாஹ்.

யா அல்லாஹ்
நான் நன்மை செய்வதும்
தீமையைவிட்டு விலகுவதும்
உன்னுடைய மேலான
அருளைக்கொண்டே
அல்லாது
நான் எதறகும் சக்திபெற்றவன் அல்ல

"மூஞ்சி புக்கு பிரபலம்"

"மூஞ்சி புக்கு பிரபலம்" இந்த பேர் இங்க உள்ள பலபேர எப்படி மாத்துது பாருங்களேன்...

ஆரம்பத்துல தன்னோட போட்டோவ போடத்தான் வராய்ங்க.. போட்டோவ போட்டதோட மட்டும் இல்லாம எதையாவது ஷேர் செய்து  தொலைய வேண்டியது.

நல்லாயிருக்குனு நாலு லைக் விழ ஆரம்பிச்சவுடனே நான் நான் நான் நினைச்சுகிட்டு தனக்குனு ஒரு பாணினு கெளம்பிருரது.

அமெரிக்க அதிபர்லேந்து ஆண்டிபட்டி  அருணாயிரம் வரையும் எல்லாத்தையும் ஓட்டுறேங்குற பேர்ல வம்பிழுக்க வேன்டியது..டெய்லி நாலு தத்துவம் சொல்றது..

இந்த நேரத்துலத்தான் வாழ்க சொல்றதுக்கு ஒரு அடிமை கும்பல் பார்ம் ஆகியிருக்கும்..

பின்னாடி காலைல எழுந்து கழிவறை போறதுலேந்து நைட் பாத்ரூம் போற வரை எல்லாத்தையும் லைவ் அப்டேட் பன்ன வேண்டியது..

யாராவது எதாவது கேட்டா ஸ்டேடஸ்லத்தான் பதில் குடுக்க வேண்டியது...

என்னப்பா இப்டி எழுதுறனு கேட்டா " என் சுவர்!! என் உரிமை !! னு கல்யான் ஜூவல்லர்ஸ் பிரபுகணக்கா டயலாக் பேசுறது..பின்னால அடிமை கும்பல அனுப்பி திட்டுறது..

இன்னும் நிறைய செய்ய  வைக்குது இந்த " முகநூல் பிரபலம் " ங்குற வார்த்தை..

இப்படியெல்லாம் பண்ணி என்னத்த அள்ளிக்கட்ட போறீங்களோ தெரியல !!

#சில_பிரபல_புலிகேசிகளுக்கும்_அவர்களுடைய_மங்குனிகளுக்கும்_சமரப்பனம்.

( பி.கு:- நிறைய விதிவிலக்கானவர்கள் உண்டு )
 

 

 

 பேஸ்புக் பிரபலங்கள் பாமரனின் பார்வையில் 

 

 

Muhammad Imthiyaz

பாலஸ்தீனம்

அங்கு
பாசிச யூத வெறியன் எறிந்த குண்டில்
பாலஸ்தீன சகோதரியின் கண் நொல்லையானது.

இங்கு

நீ கால்பந்தை பார்த்துக் கொண்டு இரு
பிரேசில் ரசிகை கண்கலங்கியதை
கரிசனமுடன் ரசனையுடன் எழுது.

அங்கு
சிறுவனின் உடல் சிதறிப் போனது

இங்கு
தன் சார்ந்த அணி தோற்று விட்டதே
என பதறிக் கொண்டிரு

துக்கமும் துயரமும்
உன்னை தீண்டாத வரை
உணரமுடியாது எனில்
உன் மனித ஜென்மம் பயனற்றது.

 

வலையுகம் ஹைதர் அலி

 

Tuesday, July 8, 2014

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை:

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை:

ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)

நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)

நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் - குறைந்தது 12 குவளை.

நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.

நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.

தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!

மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக் கிடைத்து விடும்.

"இந்த டயட்டை உணவுக்கு முன்னர் பின்பற்றுவதா அல்லது உணவுக்குப் பின்னர் பின்பற்றுவதா?" என்ற கேள்வி யாருக்காவது எழுந்தால் அத்தகையோர் மட்டும் இச்சந்தேகம் தீரும்வரை இந்த டயட்டைப் பின்பற்றவேண்டாம்.


- குடும்ப நல ஆலோசகர் மதி
source-inneram.com

ஜனநாயகத்தின் 4காம் தூ....ணாம்

ஒட்டுமொத்த ஊடகங்களும் ...
நேர்மையற்ற பரபரப்பு புரளிகலும் ...

மலேசிய விமானம் காணாமல் போய் இன்றோடு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிவிட்டன.. அந்த விமானம் என்னவாயிற்று என்றும் தெரியவில்லை.. பயணிகள் என்னாவானார்கள் என்றும் தெரியவில்லை...

வழக்கம் போல பல புரளிகள் மட்டும் தான் ஊடகங்களில் வந்தது..

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு வழக்கு என்னவாயிற்று ?

வழக்கம் போல பரபரப்பாக ஊடகங்களில் புரளிகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல இருந்தது.

புத்தகயா மற்றும் பாட்னா குண்டு வெடிப்பு வழக்குகள் என்னவாயிற்று ?

வழக்கம் போல பரபரப்பாக ஊடகங்களில் புரளிகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல இருந்தது.

இலங்கை வழியாக இந்தியாவை தக்க வந்த தீவிரவாதி தமிழகத்தில் கைது என்ற செய்தி என்னவாயிற்று..?

வழக்கம் போல பரபரப்பாக ஊடகங்களில் புரளிகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல இருந்தது.

ஆனால் ஓன்று மட்டும் உண்மை..

ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் பரபரப்பிற்காகவும் ,குறிப்பிட்ட சமூகத்தை மக்கள் மன்றத்தில் இருந்து தனிமைப்படுத்தவும் , அரசியல் லாபத்திற்காகவும் மட்டும் தானே வெளியிடுகிறார்களே ஒழிய பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியாக செய்திகளை வெளியிடுவதாக இல்லை..

இவர்களுக்கு பெயர் தான் ஜனநாயகத்தின் 4காம் தூ....ணாம்..

:Nsa Khadir

முகநூலினால்


#முகநூலினால் சகோதரத்துவம் வளருதோ இல்லையோ

#சகோதரர்களிடையோ யுத்தம் வளருகிறது.

#மல்லியூரான்

இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

சொர்க்கம் செல்ல வழி !

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்;

உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்;

கடமையான ஐவேளைத்
தொழுகைகளையும்
தவறாது பேணுங்கள்;

(ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்;

விருப்பமுடன் ஸகாத்
கொடுத்து விடுங்கள்;

அல்லாஹ்வின்
இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்;

உங்களில் அதிகாரம் உடையோருக்குக்
கட்டுப்பட்டு நடங்கள்;

நீங்கள் சொர்க்கம்
செல்வீர்கள்!.

நூல் : திர்மிதி 616,

இறுதி தூதரின் இறுதி பேருரையிலிருந்து


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
அல்குர்ஆன்-6:125
யா அல்லாஹ்!எங்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக,நேர்வழியை விட்டு திரும்பும் உள்ளத்தை எங்களுக்கு தந்துவிடாதே...

அசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை

அசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை

****************************************************************

ஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான பேச்சு.

மோடிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டியவர் ‘நான் உங்களுடைய வெற்றியை Pyrrhic victory ஆகத்தான் கருதுகின்றேன்’ என்று சொன்னதுதான் சரியான பஞ்ச். மோடியின் வெற்றியை இதனை விட நச்சென்று விமர்சிக்க முடியாது.

‘ஏன் குஜராத் 2002 படுகொலைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று ராம்விலாஸ் பாஸ்வான் சொன்னதற்கு அவர் அளித்த பதில் அழுத்தமானது. கனமானது. உவைசி சொன்னார்: ‘இந்த நாட்டின் வரலாற்றில் நாட்டின் அடிப்படைகளை ஆட்டங்காணச் செய்கின்ற அளவுக்கு நான்கு கொடூரங்கள் நடந்திருக்கின்றன. முதலாவதாக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவதாக, 1984-இல் தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகள். மூன்றாவதாக, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட கொடுமை. நான்காவதாக குஜராத்தில் 2002-இல் நடந்த முஸ்லிம் படுகொலைகள்.’

இவ்வாறு சொன்ன அதே மூச்சில் ‘எவரிடம் மனித நேயம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமைகளை மறக்க மாட்டார். நினைவில் வைத்திருப்பார். எவரிடம் மனிதம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமையாளிகளை மன்னிக்கவே மாட்டார்.’ என்று சொன்னதைக் கேட்டு அவையே சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றுவிட்டது.

Inclusive growth குறித்து பேசுகின்ற நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பன்முகத் தன்மையும் பல்வேறு இனங்களையும் மதங்களையும் மொழிகளையும் பண்பாடுகளையும் சேர்ந்து வாழ்கின்ற பன்மைச் சமூகத்தன்மையும்தான் இந்த நாட்டின் அடையாளமாக, பாரம்பர்யமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது இந்த அவையில் பிரதிபலித்துள்ளதா? யோசியுங்கள். முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை 21 ஆக சுருங்கிப் போனதேன்? சிந்தியுங்கள்.

முஸ்லிம்களை equal partnersகளாக ஆக்கிக் கொள்வோம் என்று சொல்கின்றீர்கள். சமமான பங்குதாரர்களாய் முஸ்லிம்களை எப்படி ஆக்கப் போகின்றீர்கள்? உங்களுடைய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சரே முஸ்லிம்களை சிறுபான்மையினர் எனச் சொல்லக் கூடாது என்று கூறியிருக்கின்றார். நான் கேட்கின்றேன். முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகத்தினர் இல்லை யெனில் 80 ஆயிரம் பேரைக் கொண்ட பார்சிகளுக்காகத்தான் சிறுபான்மை துறை அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்ப வேண்டுமா? அரசியல் அமைப்புச் சட்டத்தின் 29க்கும் 30க்கும் இது நேர் மாறானதாக இல்லையா?

மே 16 அன்றுதான் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வந்தது. குஜராத் அரசும் உள்துறை அமைச்சரும் சரியாகச் செயல்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. அந்த அரசின் அப்போதைய உள்துறை அமைச்சர்தான் இப்போது இந்த நாட்டின் பிரதமராகவும் இருக்கின்றார்.
தம்முடைய கையாலாகாததனத்திற்காக குஜராத் அரசு மன்னிப்பு கேட்குமா? ஏழு ஆண்டுகள், பன்னிரு ஆண்டுகள் என சிறையில் தொலைத்த அப்பாவிகளுக்கு அவர்களின் இழந்த ஆண்டுகளை மீட்டுக் கொடுப்பது யார்?

Zero tolerance to communalism என்று இந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐயா, நான் இங்கு இஹ்ஸான் ஜஃப்ரியின் மகனாக வந்திருக்கின்றேன்.
நான் இங்கு இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கின்றேன்.
நான் இங்கு முஹ்சின் சாதிக்கின் சித்தப்பாவாக வந்துள்ளேன். நான் இங்கு குஜராத் இனப் படுகொலையின்போது உயிரைப் பறிகொடுத்த அபலைகளின் சார்பாக நிற்கின்றேன்.

அந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?

- டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

Play Video

ஆதமுடைய மக்கள்

ஆதமுடைய மக்கள்
அனைவருமே தவறு செய்யக்
கூடியவர்களாக இருக்கிறார்கள்
எனினும்
ஆதமுடைய மக்களில் சிறந்தவர்
தன்
தவறை உணர்ந்து திருந்தி தன்னைப்
படைத்த இறைவனிடம் பாவ
மன்னிப்புத்
தேடுவோரே என்பது அருமை நபிகளின்
வாக்கு. நம்மைச்
சிறந்தவர் ஆக்கும்
நம்பிக்கையாளர்களே! நீங்கள்
அனைவரும்
வெற்றி பெறுவதற்காக தவ்பாச்
செய்து அல்லாஹ்வின் பால்
மீளுங்கள்!
அல்குர்ஆன்24:31.
மேலும் உங்கள் இரட்சகனிடம்
பாவமன்னிப்புத்
தேடுங்கள். பின்னர் அவன்
பக்கமே பாவத்தை விட்டும்
தவ்பா செய்து
அல்லாஹ்
இவ்வுலகத்தை நிரந்தரமாக
இருப்பதற்காக படைக்கவில்லை.
மாறாக அதற்கென முடிவு நாள்
வரும். அந்நாளே இறுதி நாளாகும்.
அதுவே ஐயத்திற்கிடமில்லாத
உண்மையுமாகும்.
அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக இறுதிநாள்
வந்தே தீரும் அதில்
சந்தேகமில்லை.(40:59)
நிராகரிப்பாளர்கள் இறுதி நாள்
எங்களிடம் வருமா?
எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர்
கூறும்: ஆம்! எம்
இறைவனின் மீது சத்தியமாக
நிச்சயமாக
அது உங்களிடம் வரும்.(34:3)
விசாரணைக்குரிய
காலம் நிச்சயமாக வந்தே தீரும்;
அதில்

சந்தேகமே இல்லை

 

 இஸ்லாமிய ஆய்வுகள்

 

 

யா அல்லாஹ்