Monday, July 14, 2014

சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்







பகிர்ந்து கொள்ளுங்கள் & உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் போராட்ட விளம்பரத்தினை முகப்பு படமாக வைத்துக் கொள்ளுங்கள் :

" சீமை கருவேலமரங்களை தடை செய்யக் கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் ஜூலை 27 அன்று மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

உங்கள் எண்ணிற்கு LM-AAPROJ என்ற பெயரில் வரும் குறுஞ்செய்திகளை தவறாமல் படிக்கவும். மேலும் +911409765177 என்ற எண்ணிலிருந்து வரும் பதிவு குரல் தகவலை தவறாது முழுமையாக கேட்கவும்.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரம் மற்றும் முக்கிய பேரூராட்சிகளில் இப்போராட்டம் நடைபெறுவதால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் ,பொதுமக்கள் போராட்டத்தை சிறப்பாக நடத்த உங்களின் முழு ஆதரவினையும் வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இடம் மற்றும் உங்களுக்கான பணி விவரம் உங்கள் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சளுக்கு அனுப்பப்படும்.

தற்போதைய தகவல்படி அரியலூர், இராமநாதபுரம்,ஈரோடு , காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை , சேலம், திருச்சிராப்பள்ளி,திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், நாமக்கல்,புதுக்கோட்டை, மதுரை,விருதுநகர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது.

- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்
தமிழ்நாடு.

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே