மாபெரும் கூட்டமொன்று
பூங்காவில் நுழைந்து
மலர்களைக் கொய்து
பாதங்களில் நசுக்கி
முட்களை அணிந்து போகிறது…
அடர்ந்த வனமொன்றில்
வானரங்கள் கூட்டம்
வெட்கம் கடந்தே
தாவியும் குதித்தும்
தன் இனமென பறைசாற்றுகிறது…
கனிகளை விடுத்து
காய்கள் பறித்தே
வெறுக்கத் தின்னும்
வேங்கைகள் கூட்டம்
மதங்கள் போர்த்திக் கொள்கிறது….
பாவங்கள் செய்பவன்
படைத்தவன் இல்லையென
கொடுத்தவனை மறந்து
கொடுமைகள் செய்து
நியாயம் கற்பிக்கும் நாத்திகர்கள்….
தேனைச் சொரியும்
மலர்கள் போலவே
வேடங்கள் புனைந்து
தேளாய் கொட்டிடும்
குள்ள நரி கூட்டங்கள்…..
பன்றியின் மாமிசம்
பரவசம் தருவதாய்
ருசித்தே உண்டு
ரசித்து சொல்லும்
ரகசியக் கூட்டங்கள்…..
யாதெனச் சொல்வேன்
கூர்முனை பிடித்தவன்
உதிர்த்திடும் வார்த்தைகள்
குதர்க்கம் கொண்டு
குற்றம் காணுகையில்…
மொழி பெயர்க்க
மறந்து போய்
விழி பிதுங்கி நிற்கிறேன்
விசித்திர உலகில்
மனிதம் தேடி…..
சின்னஞ்சிறிய வாழ்வுதனில்
சிலர் மனிதம் போர்த்திய
மிருகங்களாய் மாறியே
ஊறிய சாக்கடை நாற்றத்தின் ஒரு
சிறுதுளி இதுவென சொல்லிடத்
துணிந்தேன்….
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே