Thursday, July 17, 2014

இன்று வரை எரிகின்றது.. இன்றும் எரிகின்றது...

இன்று வரை எரிகின்றது..
இன்றும்
எரிகின்றது...
மலர்ந்த
மொட்டுக்களை
சுட்டு பொசுக்கிய பெருந்தீ
என் மனதினில்,.

பசி தீராமல்
பற்றி எரிகிறது
பள்ளிகள் எங்கும்...

இன்னும் அடங்காத
கதறல் ஒலிகள்
காற்றுவெளியெங்கும்
கேள்விகளை விதைக்கின்றன...

மதுவிற்பனையையும்
கேபிள் டிவியையும்
அரசுடமையாக்கி கொண்டாடும்
எங்கள் அரசுகள்
கல்வியை
எப்போது கொண்டாடும்?

எங்கள் சமாதிக்கு
அஞ்சலி செலுத்திய
ஆட்சியாளர்கள்
நினைவில் கொள்ளட்டும்.
நாங்கள் இன்னும்
மரணிக்கவில்லை,,

வகுப்பறைகளின் அமைதிக்கிடையே
தலைகுனிந்து கேளுங்கள்
இன்றும்
துடித்துக்கொண்டிருக்கின்றன
எங்கள் இதயங்கள்
நாங்கள் மரணிக்கவில்லை...

11 வருடங்கள் ஆகியும் இந்த வழக்கிற்கு கூட
இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை... என்ன
ஒரு வெட்கக்கேடு...

கண்ணீருடன்
கும்பகோண பள்ளிகூட
தீயில் கருகிய குழந்தைகள் !!
...

Mohamed Sha

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே