Friday, July 18, 2014

இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலான ஊடகங்களின் இஸ்லாமியர் குறித்த பார்வை

இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலான ஊடகங்களின் இஸ்லாமியர் குறித்த பார்வை

நாம் இதனை நியூயார்க் நகரில் இருந்தே ஆரம்பிக்கலாம்.

ஒரு காலைப் பொழுதொன்றில் நியூயார்க் நகர வீதியில் வந்து கொண்டிருந்த இளைஞன் அருகிலுள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.
அந்த நேரம் பார்த்து எதிர்பாரா விதமாக சிறுமி ஒருத்தியின் மீது நாய் ஒன்று பாய்கிறது. அதுவும் வெறி பிடித்த தெரு நாய். (விலங்குகள் நலச் சங்கத்தினர் மட்டும் இதைத் திரு.நாய் என்று மாற்றிப் படிக்கவும்). நாய் சிறுமியைக் குதறத் தொடங்க மற்ற சிறுவர்களும் பெற்றோர்களும் பயத்தில் தெறித்து ஓடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து கொண்டிருக்கிற அந்த அவலத்தைக் கண்டு பூங்காவினுள் பாய்கிறான் அந்த இளைஞன். வெறி பிடித்த நாயோடு கடுமையாகப் போராடி இறுதியில் அதைக் கொன்று சிறுமியின் உயிரைக் காப்பாற்றுகிறான்.
வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ் அந்த இளைஞனின் அருகில் வந்து... “நீதான் உண்மையான கதாநாயகன்... நாளை காலை பேப்பரில் பார். ‘வீரம் மிக்க ஒரு நியூயார்க்காரன் வெறிபிடித்த நாயோடு போராடி ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றினான்’ என்று வரும்...” என்கிறான்.
அந்த இளைஞனோ “நான் நியூயார்க்காரன் இல்லையே அய்யா...” என்கிறான் அப்பாவியாக..
“சரி விடு அப்படியானால் ‘அமெரிக்க இளைஞன் ஒருவன் தீரமாக நாயோடு போராடி ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றினான்’ என்று பேப்பரில் வரும்’ என்கிறான்.
அதற்கும் அந்த இளைஞன் அய்யா நான் அமெரிக்காவைச் சேர்ந்தவனும் இல்லையே என்கிறான் மீண்டும் அப்பாவியாக.
“அட அப்ப நீ அமெரிக்கனும் இல்லையா... அப்படியானால் நீ எந்த நாடு? அதையாவது சொல்” என்கிறான். “அய்யா நான் ஈராக்கில் இருந்து வருகிறேன் என்று சொல்ல...
அடுத்த நாள் அந்த போலீஸ்காரன் சொல்லிச் சென்றது மாதிரியே பேப்பரில் செய்தி வருகிறது இப்படி :
“வெறிபிடித்த முஸ்லிம் பயங்கரவாதி ஒருவன் அப்பாவி நாயை பூங்காவில் சுட்டுக் கொன்றான்” என்று.
இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலான ஊடகங்களின் இஸ்லாமியர் குறித்ததான சித்தரிப்பு.-- 


@Pamaran Tamil Nadu

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே