உமர்(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வின் பாதையில் சவாரி செய்வதற்காக நான்
ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை
(சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கிவிட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க
நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும்
எண்ணினேன். எனவே, இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு
அவர்கள், “அதை வாங்காதீர்! உம்முடைய தர்மத்தை நீர் திரும்பப் பெறாதீர்!
அவன் அதை ஒரு திர்ஹத்திற்குத் தந்தாலும் சரியே. ஏனெனில் தர்மத்தைத்
திரும்பப் பெறுபவன், தான் எடுத்த வாந்தியை உண்பவனைப் போன்றவனாவான்”
என்றார்கள்.
ஷஹீஹ் புகாரி
ஷஹீஹ் புகாரி
No comments:
Post a Comment
சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே