Wednesday, July 9, 2014

பொய் நிரப்பி எழுதாதீர்கள் !

ஊடகங்களே உங்களின் பேனாக்களில்
மை நிரப்பி எழுதுங்கள் !

பொய் நிரப்பி எழுதாதீர்கள் !

இலங்கையில் எம் தமிழ்ப் பெண்களை
கற்பழித்தவர்களுக்க்ப் பெயர் அமைதிப் படை !


வீரப்பன் வேட்டையில் மலைவாழ் பெண்களை
கற்பழித்தவர்களுக்குப் பெயர் அதிரடிப் படை !

அஸ்ஸாமிலும் மணிப்பூரிலும் பழங்க்குடி பெண்களை
கற்பழித்தவர்களுக்கு பெயர் பாதுகாப்பு படை !

காஷ்மீரில் கணவனைக் கொன்று மனைவியை
கற்பழித்தவர்களுக்கு பெயர் ராணுவப் படை !

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பெண்களைக்
கற்பழிப்பவர்களுக்குப் பெயர் காவல் படை !

கரம் கூட மேலே படாமல் கண்ணியமாக
அனுப்பி வைத்தவர்களுக்க்ப் பெயர் தீவிரவாதிகள் ?!

ஊடகங்களே உங்களின் பேனாக்களில்
மை நிரப்பி எழுதுங்கள் !
பொய் நிரப்பி எழுதாதீர்கள் !


- செங்கிஸ் கான்.

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே