Wednesday, July 9, 2014

உலகில் பலமானது எது?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹூ




உலகில் பலமானது எது??



"அல்லாஹ் பூமியைப்படைத்தபோது அது அசைந்துகொண்டும்
நடுங்கிக்கொண்டும் இருந்தது. எனவே அதில் மலைகளை ஊன்றிவிட்டான்..
பூமி நிலைபெற்று நின்றது. மலையின் வலிமையைக்கண்டு வானவர்கள் யா அல்லாஹ்
மலைகளைவிட சக்திமிகுந்த எதையும் படைத்துள்ளாயா? என்று கேட்டனர்.
ஆம் உண்டு அதுதான் இரும்பு என்றான்.



இரும்பைவிட சக்தி மிகுந்தது எது என்று கேட்டபோது நெருப்பு என்றான்.
நெருப்பைவிட சக்தி மிகுந்தது எது என்றுகேட்டபோது தண்ணீர் என்றான்.
தண்ணீரைவிட சக்தி மிகுந்தது எது என்று கேட்டபோது காற்று என்றான்.
காற்றைவிட சக்தி மிகுந்தது எது என்று கேட்டபோது வலக்கையால் கொடுக்கும் தர்மம் இடக்கைக்கு தெரியாமல் இயங்கும் மனிதன் என்றான்...!


திர்மிதி 361




மாஷா அல்லாஹ்
லா ஹவ்ல வலா ஹூவத்த
இல்லாபில்லாஹ்.

யா அல்லாஹ்
நான் நன்மை செய்வதும்
தீமையைவிட்டு விலகுவதும்
உன்னுடைய மேலான
அருளைக்கொண்டே
அல்லாது
நான் எதறகும் சக்திபெற்றவன் அல்ல

No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே