Monday, July 21, 2014

லா இலாஹ-என்றால் வேறு கடவுள் இல்லை வேறு வல்லமை மிக்கவன் இல்லை

நாம் எதை தொடங்குவதாக இருந்தாலும் அல்லாஹ்வின்
பெயரை கொண்டே தொடங்குவோம் ஏன் அவனே புகழுக்கு

உரியவன்

எனது மதிப்புக்கு உரிய சகோதரர்களே

இந்த உம்மத்

முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்

சமூகம்

கஷ்டங்களை எதிர்கொள்ளுகிறது

துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் உட்படுத்தபடுகிறது

இவை முன்பிருந்த காலங்களை விட இப்போது அதிக துன்பங்களை எதிர்கொள்கிறோம்

இன்றைய இஸ்லாமிய சமூகம்

மதிப்பற்ற நிலையில்

ஏமாற்றபடுகிறது

அவமானபடுதப்படுகிறது

சிருமைகுள்ளாக்கபடுகிறது

நம்முடைய எதிரிகளுக்கு நம் மீது உள்ள பயம் நீங்கிவிட்டது

முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்

ஒரு அறிவிப்பில் இன்றைய காலத்தை பற்றி

அருமையானதொரு முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் தனது தோழர்களிடம்

கூறினார்கள் இந்த உம்மத்தின் ஒரு காலம் வரும்

உலகம் எங்கும் அழைப்பு கொடுக்கப்படும்

எப்படி உணவிற்கு அழைப்பு கொடுக்கப்படுமோ அப்படி

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் அன்றைய காலகட்டத்தில்

முஸ்லிம்கள் எப்படி பார்க்கபடுவார்கள் என்றால்

உணவைப் போன்று பார்க்கப்படுவார்கள்

அல்லாஹ்வின் அதிரிகள் உணவை உண்பதற்காக வருவார்கள்

அப்போது முஸ்லிம்கள் சமைத்த உணவை போன்று

மேசையில் கிடப்பதை போன்று இருப்பார்கள்

ஏன் முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்

அவர்கள் உணவை எடுத்துக்காட்டாக கூறினார்கள்???



ஏன் என்றால் உணவு தன்னுடைய எதிர்ப்பை காட்டாது 


நீங்கள் கோழி துண்டை எடுக்கும்போது 


அந்தக்கோழி நம்முடன் சண்டை இடுகிறதா???


நீங்கள் சில உணவை உண்ண தயாராகும் பொழுது 


அந்த உணவு உங்கள் முகத்தில் குத்த முயற்சிகிறதா???

அவை அடிபணிந்து விட்டது அவை உணவாக மாறிவிட்டது 

நாமாவது எதிர்க்க முயற்படுவோம் 

ஆனால் உணவு ஒன்றும் செய்யாது 

 அதனால்தான் முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்

அவர்கள் இந்த உம்மத்தை உணவிற்கு ஓப்பிட்டார்கள் 

அனால் இந்த வார்த்தையை சஹாபாக்கள் கசப்பான 

மாத்திரையை போன்று எண்ணினார்கள் 

அதில் ஒரு சஹாபா அந்த செய்தியை ஏற்றுக்கொள்ளா இயலாமல் 

அவர் கூறினார் அல்லாஹ்வின் தூதரே நாம் அப்போது 

குறைந்த எண்ணிக்கையில் இருப்போமா

நமக்கு அந்த நிலை வரும்போது 

முன்போ பதர் போர்க்களத்தில் நாம் 313 தான் 

ஆனால் எதிரிகளோ ஆயிரத்திற்கு மேல் 

ஆனால் வெற்றி நமக்கு சொந்தமானது ....

மூத்தா போர்க்களத்தில் நாம் 3000 தான் 

ஆனால் எதிரிகளோ 20000 த்திற்கும் மேல் 

எண்ணிக்கையில் இருந்தார்கள் 

வெற்றி நமக்கே சொந்தமானது 

அல்லாஹ்வின் தூதரே அப்படி என்றால் 

நாம் குறைந்த எண்ணிக்கையில் இருப்போமா 

அப்போது அல்லாஹ்வின் தூதர் இல்லை 

தோழரே அன்றைய தினம் நீங்கள் 

மில்லியன் கணக்கில் இருப்பீர்கள் 

மேலும் நீங்கள் கடல் நுரையைப் போன்று 

காணப்படுவீர்கள் என்று கூறினார்கள் 

அப்போது சஹாபாக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் 

ஏன் இந்த உம்மத் இந்த நிலைக்கு வந்தது ???

எப்படி நாம் இந்த நிலைக்கு வந்தோம் 

ஒரு மாத தொலைவு  அளவிற்கு 

அவர்களுடைய இதயங்கள் நம்முடைய   பயத்தால் நிரப்பப்பட்டது 

அப்படிப்பட்ட ரசூலின் உம்மத்தை உணவிற்கு 

பகரமாக ஒப்பிடுகிறார்கள்அல்லாஹ்வின் தூதர் 

என்னுடைய சகோதரர்களே மிக தெளிவாக கேளுங்கள் 


முஹம்மது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம்


வருகையில் ஒரு மார்க்கத்தை கொண்டு வந்தார்கள்

மேலும் சில கொள்கை பொருந்திய நேரான 

பாதையுடன் வந்தார்கள்அந்த பாதையை இந்த 

உம்மத் பின்பற்றவேண்டும் அன்றில் இருந்து 

மறுமை நாள்வரை பின்பற்றினால் நாம் வெற்றியடையலாம் 

இந்த உலகத்தில் வெற்றியடையலாம் 

மண்ணறை வாழ்விலும் நாம் வெற்றியடையலாம் 


மேலும் கியாமத் என்ற மறுமை நாளிலும் வெற்றியடையலாம் .


அல்லாஹ்வின் மார்க்கம் பூர்த்தியாகிவிட்டது 

அல்லாஹ் தெளிவாக அவனது வார்த்தையில் கூறுகிறான்

இன்றைய நாள் உங்கள் மார்க்கம் பூர்த்தியாகிவிட்டது

இன்றைய தினம் உங்களுடைய மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது 

இன்றைய தினம் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை எனது

பாதையாக தேர்ந்தெடுத்துவிட்டேன் 

இஸ்லாம்தான் உங்களுடைய வெற்றி 

இஸ்லாம்தான் நம்முடைய கண்ணியம்

இஸ்லாம்தான் நமது கர்வம் 

இஸ்லாம் 

நீங்கள் எப்படி புரிந்துவைத்திருக்கிறீர்கள் அது அல்ல (இஸ்லாம் )

நான் எப்படி புரிந்துவைத்திருக்கிறேன் என்பதல்ல(இஸ்லாம்)


ஆனால் இஸ்லாமை
முஹம்மது ஸல்லலாஹூ 


அலைஹி வஸல்லம்எப்படிபுரிந்துவைத்திருந்தார்கள்

இஸ்லாமையை  முஹம்மது ஸல்லலாஹூ 

அலைஹி வஸல்லம் எப்படி வழி நடத்தி சென்றார்கள்
அது தான் இஸ்லாம் 

அல்லாஹ் கூறுகிறான் நான் அறிவேன் 

கியாமத் நாள் வரும் வரை நடக்கும் அனைத்து காரியங்களையும்

ஒவ்வொரு சோதனையையும் 

ஓவ்வொரு துயரங்களையும் 

இந்த உம்மத் எதிர்கொள்ளும் 

அனைத்து கஷ்டங்களையும் 

நீங்கள் எத்தனை வயதுடையவர்  என்பது முக்கியமல்ல 

நீங்கள் எந்த காலகட்டத்தில் வாழ்கிறீர்கள் என்பதும் முக்கியமல்ல 

நீங்கள் எப்பேர்ப்பட்ட கஷ்டங்களை எதிர்கொண்டாலும்....

உங்களை நோக்கி எப்பேர்ப்பட்ட சோதனைகளும் 

இன்னல்களும் வந்தாலும் சரி 

அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் திரும்புங்கள் 

அல்லாஹ்வின் பாதையை எதிர்நோக்குங்கள் 

நான் எதை சஹாபாக்களிடம் இருந்து 

பெற்றுக்கொண்டேனோ அதன் பக்கம் உங்கள் பார்வையை திருப்புங்கள் 

மேலும் அதுதான் உங்களுடைய வெற்றி 

மேலும் அல்லாஹ்வை தவிர்த்து வேறு ஆதரவை நீங்கள் நாடினால் 

உங்களுடைய பார்வை அல்லாஹ்வை விட்டு நீஙகுமானால்

 உங்களுடைய பார்வை அல்லாஹ்வின் அருளைவிட்டு நீங்கி

மேலும் மனிதனின் படைப்பின் மீது சாய்வீர்களானால்

மேலும் உங்களுடைய அகப்பார்வை 

அல்லாஹ்வின் ஆற்றலைவிட்டு நீங்கி 

இந்த உலகத்தின் செல்வங்களின் மீது 

உங்கள் எண்ணங்கள் விழுமானால் 

அல்லாஹ் நம்மை இழிவு படுத்துவான் 

அல்லாஹ் நம்மை கேவலபடுத்துவான்

ஏன் அந்தப் பாதை அல்லாஹ்வின் பாதையா?

அந்தப் பாதை அல்லாஹ்வின் தூதரின் பாதையா ???

நாம் அல்லாஹ்வை புறக்கணித்துவிட்டோம் 

எப்பொழுது நாம் விழிக்க போகிறோம் !!!

எப்பொழுது இதை புரிந்துகொள்வோம் 

லா இலாஹ இல்லல்லாஹ்

இது தான் வெற்றி 

இந்த கலிமா  (லா இலாஹ இல்லல்லாஹ்)

அதன் அர்த்தம் என்ன சகோதரா...

லா இலாஹ-என்றால் வேறு கடவுள் இல்லை 

வேறு வல்லமை மிக்கவன் இல்லை 

வேறு சக்தி இல்லை 

வேறு ஒன்றும் இல்லை 

அவை எத்தகைய அரசாக இருந்தாலும் சரி 

அவை எத்தகைய தொழில் நுட்பாமாக இருந்தாலும் சரி 

அவை எப்பேர்பட்ட ராணுவமாக இருந்தாலும் சரி 

அவை எவ்வளவு செல்வமாக இருந்தாலும் சரி 

அவை எப்பேர்பட்ட நிலப்பரப்பாக இருந்தாலும் சரி 


 மரங்களாக இருந்தாலும்

கடலாக இருந்தாலும் 

சமுத்திரமாக இருந்தாலும் 

மிருகங்களாக இருந்தாலும்

நிலவு 

சூரியன் 

நட்சத்திரங்கள் 

மலக்குகளாக இருந்தாலும் 

முதல் வானதில்  இருக்கும் மலக்குகளாக இருந்தாலும் 

இரண்டாவது வானம் 

மூன்றாவது வானம் 

நான்காவது வானம் 

ஐந்தாவது வானம் 

ஆறாவது வானம் 

ஏழாவது வானம் .

சமுத்திரத்திற்கு மேல் இருப்பதாக இருந்தாலும் சரி 

அல்லாஹ்வின் அறியானையாக இருந்தாலும் 

அல்லாஹ்வின் சிம்மாசனமாக இருந்தாலும் 

அனைத்தும் அழிந்துவிடும் 

அவற்றால் எதையும் நகர்த்த இயலாது 

எதையும்  உருவாக்க இயலாது 

எதையும்  சிதைக்க இயலாது 

எதையும் கொடுக்க இயலாது 

எந்த தீங்கும எந்த நன்மையும் செய்ய இயலாது 

அல்லாஹ்வை தவிர 

லா இலாஹ இல்லல்லாஹ்

இது தான் நமது கலிமா 

அதில் எந்த கடவுளும் இல்லை 

எந்த பலம் வாய்ந்தவனும் இல்லை 

எந்த சக்தியும் இல்லை 

இல்லல்லாஹ்-அல்லாஹ்வை தவிர 


அல்லாஹ் 

அல்லாஹ்தான் அனைத்தையும் ஆட்சி செய்பவன் 

அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் 

நாம் மண்டியிட்டு வணங்க தகுதியானவன் 

அல்லாஹ் ஒருவன் தான் 

அல்லாஹூ அஹத் 

அல்லாஹ் அவனே இறுதியானவன் 

நாம் நமது கண்கள் மூலம் பார்க்கும் 

அனைத்தும் குப்பைகள்தான் 

இதில் ஒன்றும் இல்லை 

அல்லாஹ் தான் அனைத்தும் 

நாம் எதுவரை அல்லாஹ்வை நேசிக்கிறோமோ 

அதுவரை அனைத்தும் நம்மை நேசிக்கும் 



எழுத்துஆக்கம்-மல்லியூரான்
(warriors love and abdul rahman inneram.com )
 






No comments:

Post a Comment

சகோதரர்களே உங்கள் கருத்துகளை பகிரலாமே